தடநில வியமலை நிறுவியொர் பாடல் வரிகள் (tatanila viyamalai niruviyor) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை
தடநில வியமலை நிறுவியொர்
தடநில வியமலை நிறுவியொர்
தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
கடல்கடை வுழியெழு மிகுசின
விடம்அடை தருமிட றுடையவன்
விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
மறையவர் நிறைதிரு மிழலையே. 1
தரையொடு திவிதல நலிதரு
தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
பெறுதிடர் வளர்திரு மிழலையே. 2
மலைமகள் தனையிகழ் வதுசெய்த
மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய
திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 3
மருவலர் புரமெரி யினின்மடி
தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
மலிதர வளர்திரு மிழலையே. 4
அணிபெறு வடமர நிழலினி
லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
ரறுபத முரல்திரு மிழலையே. 5
வசையறு வலிவன சரவுரு
வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரு
மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
பொழின்மலி தருதிரு மிழலையே. 6
நலமலி தருமறை மொழியொடு
நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
கெடவுதை செய்தவர னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ்
தருபொழி லணிதிரு மிழலையே. 7
அரனுறை தருகயி லையைநிலை
குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல்
நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
சிவனுறை பதிதிரு மிழலையே. 8
அயனொடும் எழிலமர் மலர்மகள்
மகிழ்கண1 னளவிட ஒழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
தவழ்தர வுயர்திரு மிழலையே.
பாடம் : 1 மகிழ்வண 9
இகழுரு வொடுபறி தலைகொடு
மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர்2 கொடையினர்
செறிவொடு திகழ்திரு மிழலையே.
பாடம் : 2 தருநிகழ் 10
சினமலி கரியுரி செய்தசிவ
னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின்
மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
இருநில னிடையினி தமர்வரே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…