Categories: Sivan Songs

புரைசெய் வல்வினை தீர்க்கும் பாடல் வரிகள் | puraicey valvinai tirkkum Thevaram song lyrics in tamil

புரைசெய் வல்வினை தீர்க்கும் பாடல் வரிகள் (puraicey valvinai tirkkum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தெங்கூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருத்தெங்கூர்
சுவாமி : வெள்ளிமலைநாதர்
அம்பாள் : பெரியநாயகி

புரைசெய் வல்வினை தீர்க்கும்

புரைசெய் வல்வினை தீர்க்கும்
புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 1

சித்தந் தன்னடி நினைவார்
செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின்1 தாழ்சடை முடிமேற்
கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பாடம் : 1 கொத்தன் 2

அடையும் வல்வினை யகல
அருள்பவர் அனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 3

பண்டு நான்செய்த2 வினைகள்
பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக்
குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி
மதுவுண இதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பாடம் : 2 நாம்செய்த 4

சுழித்த வார்புனற் கங்கை
சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச்
செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலையேந்திக் காமன
துடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 5

தொல்லை வல்வினை தீர்ப்பார்
சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி3 சூடிநின் றாடும்
இறையவர் இமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பாடம் : 3 அல்லி 6

நெறிகொள் சிந்தைய ராகி
நினைபவர்4 வினைகெட நின்றார்
முறிகொள் மேனிமுக் கண்ணர்
முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பாடம் : 4 நினைப்பவர் 7

எண்ணி லாவிறல் அரக்கன்
எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக்
கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி
தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 8

தேடித் தானயன் மாலுந்
திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப்
படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர்
அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 9

சடங்கொள் சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொல் தவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமின் இருமருப் பொருகைக்
கடங்கொள் மால்களிற் றுரியர்
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 10

வெந்த நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த
காழியுள் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல்
தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம்
பாறுதல் தேறுதல் பயனே.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago