பிறையணி படர்சடை முடியிடை பாடல் வரிகள் (piraiyani patarcatai mutiyitai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
பிறையணி படர்சடை முடியிடை
பிறையணி படர்சடை முடியிடை
பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவ
ளிணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழில்நிறை வயலணி
கழுமலம் அமர்கன லுருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு
நலமலி கழல்தொழன் மருவுமே. 1
பிணிபடு கடல்பிற விகளறல்
எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதம
ரனலுரு வினன்அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி
புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநல
மலிகழ லிணைதொழன் மருவுமே. 2
வரியுறு புலியத ளுடையினன்
வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில்
விழவொலி மலிகழு மலம்அமர்
எரியுறு நிறஇறை வனதடி
யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை
யிருள்கெட நனிநினை வெய்துமதே. 3
வினைகெட மனநினை வதுமுடி
கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடி யிடைபொருள் தருபடு
களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில
வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலம்அமர்
கதிர்மதி யினன்அதிர் கழல்களே. 4
தலைமதி புனல்விட அரவிவை
தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளினன்
நிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி
லெரியுண மனமரு வினனல
கலைமரு வியபுற வணிதரு
கழுமலம் இனிதமர் தலைவனே. 5
வரைபொரு திழியரு விகள்பல
பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய
கழுமலம் அமர்கன லுருவினன்
அரைபொரு புலியதள் உடையினன்
அடியிணை தொழவருவினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட
வுயருல கெய்தலொரு தலைமையே. 6
முதிருறு கதிர்வளர் இளமதி
சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை
யுடைபுலி அதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய
கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி
தொழுமறி வலதறி வறியமே. 7
கடலென நிறநெடு முடியவ
னடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படையரு ளியபுக
ழரவரை யினன்அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுடை யவன்விரி
சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகள்தன் மறுகுடை
யுயர்கழு மலவியன் நகரதே. 8
கொழுமல ருறைபதி யுடையவன்
நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை
விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமலம் அமர்கன லுருவினன்
அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையு மிலநில வகைதனி
லெளிதிமை யவர்விய னுலகமே. 9
அமைவன துவரிழு கியதுகி
லணியுடை யினர்அமண் உருவர்கள்
சமையமும் ஒருபொரு ளெனுமவை
சலநெறி யனஅற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமம
ரிறைவன தடிபர வுவர் தமை
நமையல வினைநல னடைதலி
லுயர்நெறி நனிநணு குவர்களே. 10
பெருகிய தமிழ்விர கினன்மலி
பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை
கழுமலம் உறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய
பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி
யுடையவர் விதியுடை யவர்களே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…