ஓதுவித் தாய்முன் பாடல் வரிகள் (otuvit taymun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : தழுவக்குழைந்த நாதர்
அம்பாள் : ஏலவார்குழலி
ஓதுவித் தாய்முன்
ஓதுவித் தாய்முன் அறவுரை
காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
வாய்கச்சி யேகம்பனே. 1
எத்தைக்கொண் டெத்தகை ஏழை
அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
வித்தென்னக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
பொழிற்கச்சி யேகம்பனே. 2
மெய்யம்பு கோத்த விசயனோ
டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி
போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
சூழ்கச்சி யேகம்பனே. 3
குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
காஞ்சியெம் பிஞ்ஞகனே. 4
உரைக்குங் கழிந்திங் குணர்வரி
யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்
லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
ணானெங்கள் ஏகம்பனே. 5
கருவுற்ற நாள்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
காய்கச்சி யேகம்பனே. 6
அரிஅயன் இந்திரன் சந்திரா
தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
என்னோ திருக்குறிப்பே. 7
பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்
தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்
புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
டாய்கச்சி யேகம்பனே. 8
ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
மேய சுடர்வண்ணனே. 9
உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ
ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
மோவந் திறைஞ்சுவதே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…