நெற்றிமேற் கண்ணி பாடல் வரிகள் (nerrimer kanni) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோடிகா – திருக்கோடிக்காவல் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கோடிகா – திருக்கோடிக்காவல்
சுவாமி : கோடீசுவரர்
அம்பாள் : வடிவாம்பிகையம்மை
நெற்றிமேற் கண்ணி
நெற்றிமேற் கண்ணி னானே
நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே
கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே
கோடிகா வுடைய கோவே. 1
கடிகமழ் கொன்றை யானே
கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும்
அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக்
கோடிகா வுடைய கோவே. 2
நீறுமெய் பூசி னானே
நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே
இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம்
அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே
கோடிகா வுடைய கோவே. 3
காலனைக் காலாற் செற்றன்
றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே
நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே
நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே
கோடிகா வுடைய கோவே. 4
பூணர வாரத் தானே
புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்
கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே
உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே
கோடிகா வுடைய கோவே. 5
கேழல்வெண் கொம்பு பூண்ட
கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்
என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்
வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா
கோடிகா வுடைய கோவே. 6
அழலுமிழ் அங்கை யானே
அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத்
தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ
நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்
கோடிகா வுடைய கோவே. 7
ஏவடு சிலையி னாலே
புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்
மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே
ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்
கோடிகா வுடைய கோவே. 8
ஏற்றநீர்க் கங்கை யானே
இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்
நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க்
கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்
கோடிகா வுடைய கோவே. 9
பழகநான் அடிமை செய்வேன்
பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்
மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்
அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா
கோடிகா வுடைய கோவே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…