முற்றி லாமுலை பாடல் வரிகள் (murri lamulai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கடம்பந்துறை – குளித்தலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கடம்பந்துறை – குளித்தலை
சுவாமி : கடம்பவனேஸ்வரர்
அம்பாள் : முற்றிலாமுலையாள்
முற்றி லாமுலை
முற்றி லாமுலை
யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும்
அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை
யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென்
றாளெங்கள் பேதையே. 1
தனகி ருந்ததொர்
தன்மைய ராகிலும்
முனகு தீரத்
தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை
யான்கடம் பந்துறை
நினைய வல்லவர்
நீள்விசும் பாள்வரே. 2
ஆரி யந்தமி
ழோடிசை யானவன்
கூரி யகுணத்
தார்குறி நின்றவன்
காரி கையுடை
யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர்
சென்றடை மின்களே. 3
பண்ணின் இன்மொழி
கேட்கும் பரமனை
வண்ண நன்மல
ரான்பல தேவருங்
கண்ண னும்மறி
யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை
யாயின நாசமே. 4
மறைகொண் டம்மனத்
தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி
னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை
யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை
தீரத் தொழுமினே. 5
நங்கை பாகம்வைத்
தந்நறுஞ் சோதியைப்
பங்க மின்றிப்
பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை
யான்கடம் பந்துறை
அங்க மோதி
அரனுறை கின்றதே. 6
அரிய நான்மறை
ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க
ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி
னான்கடம் பந்துறை
உரிய வாறு
நினைமட நெஞ்சமே. 7
பூமென் கோதை
உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும்
உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த
பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந்
தீவினை நாசமே. 8
பார ணங்கி
வணங்கிப் பணிசெய
நார ணன்பிர
மன்னறி யாததோர்
கார ணன்கடம்
பந்துறை மேவிய
ஆர ணங்கொரு
பாலுடை மைந்தனே. 9
நூலால் நன்றா
நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன்
ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந்
தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த
வல்வினை வீடுமே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…