Categories: Sivan Songs

குண்டனாய்ச் சமண பாடல் வரிகள் | kuntanayc camana Thevaram song lyrics in tamil

குண்டனாய்ச் சமண பாடல் வரிகள் (kuntanayc camana) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

குண்டனாய்ச் சமண

குண்டனாய்ச் சமண ரோடே
கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ
தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே
திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
சொல்லிநான் திரிகின் றேனே. 1

பீலிகை இடுக்கி நாளும்
பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல
மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந்
திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்
அழகிதா எழுந்த வாறே. 2

தட்டிடு சமண ரோடே
தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே
உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்
திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே
உம்மைநான் உகந்திட் டேனே. 3

பாசிப்பல் மாசு மெய்யர்
பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை
நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்
திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
வல்வினை மாயு மன்றே. 4

கடுப்பொடி யட்டி மெய்யிற்
கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே
மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்
திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே
அருந்தவஞ் செய்த வாறே. 5

துறவியென் றவம தோரேன்
சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்
உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த
திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்
மதியுனக் கடைந்த வாறே. 6

பல்லுரைச் சமண ரோடே
பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்
சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்
திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்
நினைந்தபோ தினிய வாறே. 7

மண்ணுளார் விண்ணு ளாரும்
வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே
இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்
திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக்
கருதிற்றே முடிந்த வாறே. 8

குருந்தம தொசித்த மாலுங்
குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந்
திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்
திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே
பொய்வினை மாயு மன்றே. 9

அறிவிலா அரக்க னோடி
அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு
மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்
நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்
திருவையா றமர்ந்த தேனே.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

3 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago