காடுபயில் வீடுமுடை யோடுகலன் பாடல் வரிகள் (katupayil vitumutai yotukalan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தேவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : தேவூர்காடுபயில் வீடுமுடை யோடுகலன்
காடுபயில் வீடுமுடை யோடுகலன்
மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி
கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ்
மாடமிடை தேவூரதுவே. 1
கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை
வொன்றிவரு தேவூரதுவே. 2
பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை
பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ
லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற
வாடிமலர் சூடிவிரையார்
*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு
வொன்றிவளர் தேவூரதுவே.
(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. ) 3
மாசில்மனம் நேசர்தம தாசைவளர்
சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு
பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே. 4
கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே. 5
ஆறினொடு கீறுமதி யேறுசடை
யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
நீறன்நமை யாளும்அரனூர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர்
வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள
வாளைவரு தேவூரதுவே. 6
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்
அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன
தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள்
தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை
யாடிவளர் தேவூரதுவே. 7
ஓதமலி கின்றதென் இலங்கையரை
யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில
டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட
மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி
லாளர்புரி தேவூரதுவே. 8
வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு
சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய
அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை
யாழ்மருவு தேவூரதுவே. 9
பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு
மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்… … … … … ..
… … … … .. … … … …
( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின ) 10
துங்கமிகு பொங்கரவு தங்குசடை
நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு
பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
வல்லவர்கள் சங்கையிலரே. 11
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…