Categories: Sivan Songs

கரவாடும் வன்னெஞ்சர்க் பாடல் வரிகள் | karavatum vannencark Thevaram song lyrics in tamil

கரவாடும் வன்னெஞ்சர்க் பாடல் வரிகள் (karavatum vannencark) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : ஏகாம்பரநாதர்
அம்பாள் : காமாட்சியம்மை

கரவாடும் வன்னெஞ்சர்க்

கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை
விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ
அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 1

தேனோக்குங் கிளிமழலை
உமைகேள்வன் செழும்பவளந்
தானோக்குந் திருமேனி
தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர்
சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 2

கைப்போது மலர்தூவிக்
காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத்
தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி
ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை
என்மனத்தே வைத்தேனே. 3

அண்டமாய் ஆதியாய்
அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர்
பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச்
சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை
என்மனத்தே வைத்தேனே. 4

ஆறேறு சடையானை
ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற்
பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி
நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை
என்மனத்தே வைத்தேனே. 5

தேசனைத் தேசங்கள்
தொழநின்ற திருமாலாற்
பூசனைப் பூசனைகள்
உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர்
தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 6

நல்லானை நல்லான
நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள்
மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த
பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 7

விரித்தானை நால்வர்க்கு
வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப்
பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர்
தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை
என்மனத்தே வைத்தேனே. 8

ஆகம்பத் தரவணையான்
அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக
மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும்
இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை
என்மனத்தே வைத்தேனே. 9

அடுத்தானை உரித்தானை
அருச்சுனற்குப் பாசுபதங்
கொடுத்தானைக் குலவரையே
சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச்
சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை
என்மனத்தே வைத்தேனே.

இத்தலம் தொண்டை நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago