Categories: Sivan Songs

ஏடுமலி கொன்றையர பாடல் வரிகள் | etumali konraiyara Thevaram song lyrics in tamil

ஏடுமலி கொன்றையர பாடல் வரிகள் (etumali konraiyara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநள்ளாறு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநள்ளாறு
சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பாள் : போகமார்த்த பூண்முலையாள்

ஏடுமலி கொன்றையர

ஏடுமலி கொன்றையர
விந்துஇள வன்னி
மாடவல செஞ்சடையெம்
மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர
வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது
வீசியநள் ளாறே. 1

விண்ணியல் பிறைப்பிள
வறைப்புனல் முடித்த
புண்ணியன் இருக்குமிட
மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை
பாடும்அடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி
பாடுசெய்நள் ளாறே. 2

விளங்கிழை மடந்தைமலை
மங்கையொரு பாகத்
துளங்கொள இருத்திய
வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு
தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி
பாடுசெய்நள் ளாறே. 3

கொக்கரவர் கூன்மதியர்
கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட
மென்பர்தடம் மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும்
விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமநினை
வெய்தியநள் ளாறே. 4

நெஞ்சமிது கண்டுகொ
ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளும்
மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர்
கைதொழ எழுந்த
நஞ்சமுது செய்தவன்
இருப்பிடம்நள் ளாறே. 5

பாலனடி பேணவவ
னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு
னுதைத்தஅர னூராம்
கோலமலர் நீர்க்குட
மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில்
பேணியநள் ளாறே. 6

நீதியர் நெடுந்தகையர்
நீள்மலையர் பாவை
பாதியர் பராபரர்
பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி
யாதுமறை நாளும்
ஓதியரன் நாமமும்
உணர்த்திடும்நள் ளாறே. 7

கடுத்துவல் அரக்கன்முன்
நெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள்
பத்தும்மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம
தென்பரளி பாட
நடத்தகல வைத்திரள்கள்
வைகியநள் ளாறே. 8

உயர்ந்தவ னுருக்கொடு
திரிந்துலக மெல்லாம்
பயந்தவன் நினைப்பரிய
பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர்
மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி
யார்திருநள் ளாறே. 9

சிந்தைதிரு கற்சமணர்
தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு
கின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு
விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில்
முழங்கியநள் ளாறே. 10

ஆடலரவார் சடையன்
ஆயிழைதன் னோடும்
நாடுமலி வெய்திட
இருந்தவன்நள் ளாற்றை
மாடமலி காழிவளர்
பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை
யாபழிகள் நோயே.

திருச்சிற்றம்பலம்

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago