சொன்மாலை பயில்கின்ற பாடல் வரிகள் (conmalai payilkinra) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்
சுவாமி : ஆபத்சகாயர்
அம்பாள் : பெரியநாயகியம்மை
சொன்மாலை பயில்கின்ற
சொன்மாலை பயில்கின்ற
குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு
பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள்
முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
பொன்மாலை மார்பன்என்
புதுநலமுண் டிகழ்வானோ. 1
கண்டகங்காள் முண்டகங்காள்
கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான்
பாட்டோ வாப் பழனத்தான்
வண்டுலாந் தடமூழ்கி
மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான்
குறிக்கொள்ளா தொழிவானோ. 2
மனைக்காஞ்சி* இளங்குருகே
மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான்
பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம்
உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள்
சொற்றூதாய்ச் சோர்வாளோ.
* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம். 3
புதியையாய் இனியையாம்
பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று
பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை
மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல்
விளையாடல் விடுத்தானோ. 4
மண்பொருந்தி வாழ்பவர்க்கும்
மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும்
வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும்
பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங்
கைவிடநான் கடவேனோ. 5
பொங்கோத மால்கடலிற்
புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய்
செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான்
அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றைத்
தாரருளா தொழிவானோ. 6
துணையார முயங்கிப்போய்த்
துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான்
பாட்டோ வாப் பழனத்தான்
கணையார இருவிசும்பிற்
கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என்
எழில்நலமுண் டிகழ்வானோ. 7
கூவைவாய்* மணிவரன்றிக்
கொழித்தோடுங் **காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்கப்
பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன்
கொல்லேற்றின் கொடியாடைப்
பூவைகாள் மழலைகாள்
போகாத பொழுதுளதே.
*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் – அவையாவன – யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு முத்துக்களாம்.
**காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை – சங்கு, இப்பி, மீன், தாமரை மலர் என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த எனத் திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 2-வது பதிகம் 5-வது திருப்பாடலானு முணர்க. 8
புள்ளிமான் பொறியரவம்
புள்ளுயர்த்தான் மணிநாகப்
பள்ளியான் தொழுதேத்த
இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும்
என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென்
கனவளையுங் கடவேனோ. 9
வஞ்சித்தென் வளைகவர்ந்தான்
வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம்
பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய
அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற
சேவடியாய் கோடியையே.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…