சிந்தை வாய்தலு பாடல் வரிகள் (cintai vaytalu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி
சிந்தை வாய்தலு
சிந்தை வாய்தலு
ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால்
வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர்
மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர்
பாம்பர்ஐ யாறரே. 1
பாக(ம்) மாலை
மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின்
ஈருரி போர்த்தவர்
கோக மாலை
குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ்
சாடும்ஐ யாறரே. 2
நெஞ்ச மென்பதோர்
நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர்
வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின்
நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற
அருளும்ஐ யாறரே. 3
நினைக்கும் நெஞ்சினுள்
ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல்
வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத்
துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள்
ளாரும்ஐ யாறரே. 4
பரியர் நுண்ணியர்
பார்த்தற் கரியவர்
அரிய பாடலர்
ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர்
காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க்
கெளியர்ஐ யாறரே. 5
புலரும் போது
மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக
ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும்
இலாதது மன்றியும்
அலரும் போதும்
அணியும்ஐ யாறரே. 6
பங்க மாலைக்
குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர்
காதன்மை செய்தவர்
மங்கை மாலை
மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ்
சூடும்ஐ யாறரே. 7
முன்னை யாறு
முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு
பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு
மருவிய மாதவன்
தன்னை யாறு
தொழத்தவ மாகுமே. 8
ஆனை யாறென
ஆடுகின் றான்முடி
வானை யாறு
வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக்
கேற்கவன் இன்னருள்
தேனை யாறு
திறந்தாலே யொக்குமே. 9
அரக்கின் மேனியன்
அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி
யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து
வாயும் அலறவே
அரக்கி னானடி
யாலும்ஐ யாறனே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…