செண்டா டும்விடையாய் பாடல் வரிகள் (centa tumvitaiyay) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்காளத்தி தலம் தொண்டைநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்காளத்திசெண்டா டும்விடையாய்
செண்டா டும்விடையாய்
சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா
ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங்
கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 1
இமையோர் நாயகனே
இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய்
கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய்
உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 2
படையார் வெண்மழுவா
பகலோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே
விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ்
கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால்
உகந்தேத்த மாட்டேனே. 3
மறிசேர் கையினனே
மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய
குருவேயுன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார்
நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 4
செஞ்சே லன்னகண்ணார்
திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன்
நலமொன்றறி யாமையினாற்
துஞ்சேன் நானொருகாற்
றொழுதேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 5
பொய்யவன் நாயடியேன்
புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங்
கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே
விளங்குந்திருக் காளத்தியென்
ஐயநுன் றன்னையல்லால்
அறிந்தேத்த மாட்டேனே. 6
கடியேன் காதன்மையாற்
கழற்போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட
குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள்
முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால்
அறியேன்மற் றொருவரையே. 7
நீறார் மேனியனே
நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற்
கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற்
பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால்
இனிஏத்த மாட்டேனே. 8
தளிர்போல் மெல்லடியாள்
தனைஆகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தென்னுள்ளம்
புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந்
திருக்காளத்தி யுள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால்
இனியொன்றும் உணரேனே. 9
காரா* ரும்பொழில்சூழ்
கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை
அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள்
செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம்
பெறுவார்பிழைப் பொன்றிலரே.
(* காரூரும் என்றும் பாடம்) 10
திருச்சிற்றம்பலம்
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…