திருச்சிற்றம்பலம் – Adaikalapathu Lyrics Tamil
செழுக்கமலத் திரளனநின்
சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன்
போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப்
பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன்
உடையாய்உன் அடைக்கலமே. 1
வெறுப்பனவே செய்யும் என்சிறு
மையைநின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவ
னேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே நின்திருவரு
ளால்என் பிறவியைவேர்
அறுப்பவனே உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 2
பெரும்பெருமான்என் பிறவியை
வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெரு
மான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடு
மாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 3
பொழிகின்ற துன்பப் புயல்வெள்
ளத்தில்நின் கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர்
வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக்
காமச் சுறவெறிய
அழிகின்ற னன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 4
சுருள்புரி கூழையர் சூழலிற்
பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையிலே கிடந்
தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்
பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 5
மாழைமைப் பாவிய கண்ணியர்
வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள்
வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 6
மின்கணினார் நுடங்கும் இடையார்
வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கண னாய்ப்புரள் வேனைப்
புரளாமற் புகுந்தருளி
என்கணி லேஅமு தூறித்
தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கண னேஉடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 7
மாவடு வகிரன்ன கண்ணிபங்
காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு
வாய்நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற்
கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 8
பிறிவறி யாஅன்பர் நின்னருட்
பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற்
றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி
யேன்நின்னையே அறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 9
வழங்குகின் றாய்க்குன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை
யேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்
பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி
யேன்உன் அடைக்கலமே. 10
அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு
சிறப்பு: பக்குவ நிண்ணயம்; கலவைப் பாட்டு.
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…