Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
என்ன வரம் கேட்பேன் நானே மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே, -கே. ஜே. யேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Enna Varam Ketpen Naane manam makizhnthu Arulum Sabareeshwarane (Ayyappan Song) from Sarana Tharangini – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics
சாமியே சரணம் ஐயப்பா!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
என்ன வரம் கேட்பேன் நானே?
என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா,
பொருளை நான் வேண்டவா……,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்
சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்
கடலுக்குள் நான் பிறந்தால்
முத்துக்கள் சேர்க்கணும்…..
முத்துக்கள் கோர்த்து
வந்து ஐயனுக்கு சூட்டணும்,
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
ஆ……..
மனிதனாகப் பிறந்து விட்டேன்,
எப்படி நான் வாழணும்?
இசை என்னும் மந்திரக்கோலால்
மதங்களை நான் சேர்க்கணும்.
மதங்கள் எனும் மலைகள்,
ஜாதி எனும் தடைகள் கடந்திட
ஐயன் உன் அருளினை நான் பெறணும்.
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம், கேட்பேன் நானே,
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே…!
முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்
திருவாபரணப்பெட்டி மேலே
காவலுக்குப் போகணும்
மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்
ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
ஆ…..
காற்று மண்டலத்தில் எங்கும்
உன் புகழைப் பாடணும்
பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றணும்:
மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்
தொடர்ந்திட ஐய்யன் இரு திருவடி சரணம்!
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,
புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,
நல்ல பண்பை நான் வேண்டவா,
இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!
என்ன வரம், வேறென்ன வரம்
என்ன வரம் கேட்பேன் நானே
மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே
சாமியே சரணம் ஐயப்பா!
இந்த Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே | enna varam ketpen naane பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள், Ayyappan Tamil Song Lyrics Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே Enna Varam Ketpen Naane | என்ன வரம் கேட்பேன் நானே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…
Ekadantaya Vakratundaya Lyrics in Tamil ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் (Ekadantaya Vakratundaya Lyrics) பாடல் வரிகள் கணநாயகய…
108 Vinayakar potri in Tamil 108 விநாயகர் போற்றி (108 Vinayakar potri lyrics in tamil) இந்த…
Vinayaka Ashtothram Lyrics in Tamil ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர ச'த நாமாவளி - Vinayaka ashtothram tamil ஓம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…