Categories: Anjaneyar Songs

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் | sri hanumat pancharatnam stotra lyrics in tamil

Sri Hanumat Pancharatnam Stotra Lyrics in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் வரிகள் | Shri Hanumat Pancharatnam Stotra Lyrics Tamil

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்

ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் ॥ 1॥

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்

ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் ॥ 2॥

ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்

கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே ॥ 3॥

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:

தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி ॥ 4॥

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்

தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம் ॥ 5॥

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

இதி ஸ்ரீமச்சங்கர-பகவத‌: க்ருʼதௌ ஹனுமத்-பஞ்சரத்னம் ஸம்பூர்ணம் ॥ |

============

Download PDF

============

ஹனுமத் பஞ்சரத்னம் பொருள்

============

Sri Hanumat Pancharatnam Stotra Meaning In Tamil

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் ‘ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ பொருள் இங்கே உங்களுக்காக…

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்

ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

பொருள் :

எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்

ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

பொருள் :

பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்

கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

பொருள் :

மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:

தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

பொருள் :

சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்

தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

பொருள் :

வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

பொருள் :

பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள – ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.

============

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் பலன்

============

Sri Hanumat Pancharatnam Stotra Benefits

ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்ரம் ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதரால் இயற்றப்பட்டது. ஸ்ரீ ஹனுமத் பஞ்சரத்னா என்றால் ஸ்ரீ ஹனுமான் மீது ஐந்து ரத்தினங்கள் கொண்ட மாலை என்று பொருள். ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ராமனிடம் அசைக்க முடியாத பக்தி கொண்ட ஒரு தீவிர‌ பக்தர் ஆவார், அவர் ராமர் மீது தனது அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக பெரிய செயல்களில் தூண்டப்பட்டார். காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை, அனுமனுக்கு புத்தி மற்றும் உடல் பலம் உள்ளது, எனவே அவரை வணங்குவதன் மூலம் ஞானம், வலிமை, புகழ், வீரம், அச்சமின்மை, ஆரோக்கியம், உறுதிப்பாடு, கலைத்திறன் போன்ற அனைத்து செல்வங்களையும் பெறுவார் என்று கூறினார். ஹனுமத் பஞ்சரத்தினத்தின் பல ஸ்ருதி குறிப்பிடுகிறது:

“அனுமனின் இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர், இவ்வுலகில் பலகாலம் அனைத்து பொருட்களையும் அனுபவித்துவிட்டு, ஸ்ரீராம பக்தனாகிறான்.”

இந்த தெய்வீக துதியை அனைவரும் பாடி ஆஞ்சநேயரின் அருள் பெறுவோம்!

இந்த ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் | sri hanumat pancharatnam stotra lyrics in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Jai Hanuman Songs, ஹனுமான் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஆஞ்ச‌நேயர் பாடல்கள் ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago