Categories: Amman Songs

| vellai thamarai meethamarnthu

Vellai Thamarai Meethamarnthu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வெள்ளை தாமரை மீதமர்ந்து காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வெள்ளை தாமரை மீதமர்ந்து எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள் ‍பி. சுசீலா பாடிய‌ சரஸ்வதி தேவி பாடல்கள் தாயே கருமாரியம்மா ஆல்பத்தில் இருந்து. Vellai Thamarai Song lyrics from album Thaye Karumari Amma sung by P.Susheela – songs Tamil Lyrics

============

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

மூட‌ நிலை கொண்ட காளிதாசரை

பாடிட வைத்த கலை அரசி

அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிட

நாவில் அமர்ந்த எழிலரசி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

வீணை ஒலி சிந்த கான மழையினை

பொழிந்திடும் எங்கள் பூமகளே

கல்வி கடலென்று உன்புகழ் பாடிட

சிந்தையில் உறையும் நாமகளே

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

இந்த | vellai thamarai meethamarnthu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள், Krithis, Navarathri Special Tamil Songs Lyrics வெள்ளை தாமரை மீதமர்ந்து போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Share
Published by
Aanmeegam Lyrics

Recent Posts

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் | odi odi utkalantha jothi lyrics

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…

2 months ago

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava song tamil lyrics

அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…

4 months ago

Villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள்

villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…

5 months ago

விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் | Vishveshwara Lahari Tamil Lyrics

Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

சின்ன சின்ன முருகா பாடல் வரிகள் | Chinna Chinna Muruga Song Lyrics Tamil

Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…

5 months ago

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics Tamil

விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…

8 months ago