Garbarakshambigai 108 Potri in tamil | Garbarakshambigai 108 namavali இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி
1. ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
2. ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
3. ஓம் கருகாவூர் தேவியே போற்றி
4. ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
5. ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
6. ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
7. ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
8. ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
9. ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
10. ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
11. ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
12. ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
13. ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
14. ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
15. ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
16. ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
17. ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
18. ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
19. ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
20. ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
21. ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
22. ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
23. ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
24. ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
25. ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
26. ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
27. ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
28. ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
29. ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
30. ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
31. ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
32. ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
33. ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
34. ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
35. ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
36. ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
37. ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
38. ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
39. ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
40. ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
41. ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
42. ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
43. ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
44. ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
45. ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
46. ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
47. ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
48. ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
49. ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
50. ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
51. ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
52. ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
53. ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
54. ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
55. ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
56. ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
57. ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
58. ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
59. ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
60. ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
61. ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
62. ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
63. ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
64. ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
65. ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
66. ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
67. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
68. ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
69. ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
70. ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
71. ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
72. ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
73. ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
74. ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
75. ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
76. ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
77. ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
78. ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
79. ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
80. ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
81. ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
82. ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
83. ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
84. ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
85. ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
86. ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
87. ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
88. ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
89. ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
90. ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
91. ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
92. ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
93. ஓம் சக்தியின் வடிவமே போற்றி
94. ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
95. ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
96. ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
97. ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
98. ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
99. ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
100. ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
101. ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
102. ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
103. ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
104. ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
105. ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
106. ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
107. ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
108. ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…
============
கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்
============
குழந்தைப் பாக்கியம் பெற கர்ப்பரட்சாம்பிகை அம்மன் வழிபாடு
குழந்தைப் பேறு இல்லாதவர்கள், அம்பாள் சன்னதியில் நெய்யால் படிமெழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்து கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும். இந்த நெய் பிரசாதத்துடன் அரை கிலோ சுத்தமான நெய் கலந்துவைத்துக்கொண்டு இரவு படுக்கைக்குச் செல்லும்போது சிறிதளவு எடுத்து தம்பதியினர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை நினைத்து வணங்கி 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். கணவரால் நாள்தோறும் நெய் சாப்பிட இயலாவிட்டாலும்
மனைவி தினமும் நெய் சாப்பிட்டு வர வேண்டும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதையும் தொடரலாம். பெண்கள் மாத விலக்கு காலங்களில் 5 நாள்கள் நெய் சாப்பிட வேண்டாம். இவ்வாறு செய்தால் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அருளால் மகப்பேறு உண்டாகும்.
இக்கோயிலில் சுவாமியையும், அம்பாளையும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரையும் ஒரு சேர வலம் வந்தால் வேண்டியது கிடைக்கும் என நம்பப்படுகிறது. இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.
இந்த கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | garbarakshambigai 108 potri பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, 108 போற்றிகள், Garbarakshambigai Amman Mantras கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பரட்சாம்பிகை 108 போற்றி | திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள் (Odi odi Utkalantha Jothi lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது...…
அழகான பழனி மலை ஆண்டவா Song Lyrics Tamil Azhagana Pazhani Malai Andava Murugan Song Tamil Lyrics…
villali veeran ayya song lyrics in tamil | சுவாமி ரொம்ப சிறுசையா பாடல் வரிகள் எத்தனையோ மலைகள்…
Vishveshwara Lahari Tamil Lyrics விஸ்வேஸ்வர லஹரி பாடல் வரிகள் (Vishveshvara lahari tamil lyrics) இந்த பதிவில் நீங்கள்…
Chinna Chinna Muruga Song Lyrics Tamil Chinna Chinna Muruga Muruga Singara Muruga இந்த பதிவில் நீங்கள்…
விநாயகர் அகவல் (Vinayagar Agaval) – ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர் அகவல் (vinayagar agaval) என்பது இந்து…